Sunday, August 29, 2021

கேரளாவில் பௌத்தம் – நூல் அறிமுகம்

 

பி.சி. அலெக்ஸாண்டர் அவர்கள் 1949ஆம் ஆண்டு Buddhism in Kerala என்ற புத்தகத்தை வெளியிட்டார். நவீன காலத்தில் உருவாகி வந்த தரவுகளைப் பயன்படுத்தி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகால கேரளாவின் பௌத்த வரலாற்றை ஆராய்ந்து பி.சி. அலெக்ஸாண்டர் இந்நூலில் தந்துள்ளார். இந்நூலினை ஆய்வாளர் இ. ஜெயபிரகாஷ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.


                  இந்நூலில் அமைந்துள்ள இயல்கள் / தலைப்புகளைக் கவனித்தாலே இப்புத்தகம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது. தலைப்புகள் மட்டும் அல்லாமல் இந்நூலுக்குள் பேசப்படும் பொருண்மைகளும் மிகவும் கவனிக்கத்தக்கவையாகும். இந்நூலில் அமைந்துள்ள தலைப்புகள் பின்வருமாறு அமைந்துள்ளன.


 

1.    கிறித்தவத்திற்கு முந்தைய நூற்றாண்டுகளில் கேரளாவில் பௌத்தத்தின் பரவல்

2.    கிறித்தவத்தின் தொடக்ககால நூற்றாண்டுகளில் கேரளாவில் பௌத்தத்தின் பரவல்

3.    புத்தராக மாறிய பெருமாள்

4.    திருவிதாங்கூரில் பௌத்த அடிச்சுவடுகள்

5.    ஸ்ரீமூலவாசம் – பண்டைய கேரளாவில் புகழ்வாய்ந்த பௌத்த மையம்

6.    கேரள பௌத்தத்தில் சீனப்பயணிகள்

7.    கேரளாவில் பௌத்தமும் சாஸ்தா வழிபாடும்

8.    கேரளாவின் ஈழவர்களும் பௌத்தமும்

9.    கேரளாவில் பௌத்தமும் பிராமணீயமும்

10. கேரளாவில் பௌத்தத்தின் தாக்கம்

11. கேரளாவில் பௌத்தத்தின் வீழ்ச்சி

12. பண்டைய கேரளாவில் அரசியல் நிலைகள்

 

 

 (இந்நூலினைப் பெறுவதற்கான இணைப்பு https://bit.ly/Buddhism_in_Kerala  )

 

 

நூலாசிரியர்

இ. ஜெயபிரகாஷ்

Email: writerjayaprakash@gmail.com

 

                 

 

No comments:

Post a Comment