பௌத்த சொல்லாடல் மரபில் ஆரியம் வெளிப்படும் கோணாங்குப்பம் உண்மை
நானும் தோழர் அருள் முத்துக் குமரனும் முகாசப் பரூருக்குக் கள ஆய்வுக்குச் சென்று திரும்பும் வழியில் கோணாங்குப்பத்திலுள்ள வீராமாமுனிவர் கட்டிய தேவாலயத்திற்கு சென்றோம். ஆலயத்தில் கோணாங்குப்பத்தின் பழைய ஊர்ப்பெயர் ஆரியம் என்று எழுதப்பட்டிருந்தது.
ஆரியம் என்ற சொல்லை கேட்டவுடன் எடுத்த எடுப்பில் ஆரியம் என்பது இனப்பொருளில் புரிந்துகொள்ளப்படுகிறது. தமிழ் மொழி வரலாற்றில் ஆரியம் என்பது நீண்ட நெடிய காலந்தொட்டே தமிழோடு இணைந்துள்ள சொல்லாகும். ஆரியம் என்பது அய்யனாருக்கு உரிய பெயர்களில் ஒன்று என்று ரா.பி. சேதுப்பிள்ளை கூறுகிறார். மேலும், அய்யப்பன் வீற்றிருக்கும் இடம் ஆரியங்காவு என்பதையும் குறிக்கிறார். புத்தருக்கு உரிய பெயர்களில் அய்யனார் என்பதுவும் ஒன்று என்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
தம்(ரு)மபுரி பகுதியில் வரகு அரிசியைக் குறிப்பிடுவதற்கு ஆரியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சங்க கால மன்னர்களில் ஒருவரின் பெயர் ஆரிய அரசன் பிருகத்லாதன் என்பதாகும். இம்மன்னன் பௌத்தத்தோடு தொடர்புடையவரா என்பது விரிவாக ஆராயத்தக்கது.
கோணாங்குப்பத்தின் பழைய ஊர்ப்பெயரான ஆரியம் என்பது பௌத்தத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம்.
கள ஆய்வுக்கு சென்ற பிறகு, இன்று ஆரியம் என்னும் பெயர் பௌத்தத்தோடு தொடர்புபெற்று இருப்பதை அறிந்து நண்பர் அருள் முத்துக் குமரனுக்குத் தொலைபேசி அழைப்புவிடுத்து செய்தியைப் பகிர்ந்தவுடன் அவர் உடனடியாக அய்யப்பனுக்குப் பாடப்படும் பாடல் ஒன்றை "ஆரியங்காவு அய்யாவே" என்று மகிழ்ச்சியோடு பாடினார்..
No comments:
Post a Comment