வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் தொண்டு செய்ய தன்னை அர்ப்பணித்துக்கொண்ட உ.வே.சா அவர்கள் மணிமேகலைக்கு அரும்பதவுரை எழுதி 1898 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் மணிமேகலை பதிப்பை வெளியிட்டார். இதற்கு முன்பாக மணிமேகலை மூலம் மட்டும் திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது மணிமேகலையின் முதல் அச்சு பதிப்பாகும். உ.வே.சா அவர்களின் பதிப்பு மணிமேகலையின் இரண்டாவது பதிப்பு என்றாலும் மணிமேகலை அரும்பதவுரையுடன் வெளிவந்த பதிப்பில் முதல்பதிப்பு என்கிற அடையாளத்தை பெற்றது. தத்துவங்களும் தருக்கங்களும் நிறைந்த மணிமேகலைக் காப்பியத்திற்கு அரும்பதவுரை எழுதி வெளியிடுவதன் சிரமத்தை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும். கும்பகோணம் கவர்ன்மென்ட் காலேஜ்ஜில் தமிழ்ப் பண்டிதராக பணிபுரிந்து வந்த உ.வே.சா இந்நூலை சென்னையில் உள்ள வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கச் செய்தார் என்பதிலிருந்து இந்நூலை அவர் பதிப்பதற்கு எடுத்துக்கொண்ட சிரமத்தை நம்மால் உணர முடியும்.
பிற்காலத்தில் சுயசரிதை எழுதிய உ.வே.சா அதில் மணிமேகலையைப் பதிப்பித்த அனுபவம் பற்றி எழுதினார். இந்த அனுபவத்தை வாசிக்கும்போது மணிமேகலைக் காப்பியத்தைப் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தை உணரலாம்.
உ.வே.சா பதிப்பித்த நூல்களில் அவருக்கு மணிமேகலை ஏற்படுத்திய சிரமத்தைப் போல வேறு எந்த நூலும் ஏற்படுத்திருக்காது என்றுதான் கூறவேண்டும். இதை "மணிமேகலைதான் பலவகையான சிக்கல்களை உண்டாக்கியது" என்று அவர் கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
தனக்கு ஒன்று தெரியும் என்றால் தெரியும் தெரியாது என்றால் தெரியாது என்று கூறும் மனம் படைத்த உ.வே.சா அவர்கள் மணிமேகலையின் சமயத்தைப் பற்றி கூறுகையில் "முதலில் அந்நூல் இன்ன சமயத்தைச் சார்ந்தது என்பது எனக்கு தெரியவில்லை" என்று வெளிப்படையாக கூறும் தன்மை கொண்டவராக இருந்தார். மணிமேகலை தொடர்பாக உ.வே.சா அவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்து வைத்த மிக முக்கியமான நபர்களில் ஒருவர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய மளூர் ரங்காசாரியர் அவர்களே ஆவார்.
இக்காப்பியம் பௌத்த சமயத்தைச் சார்ந்தது என்று உ.வே.சா அவர்களுக்கு அவர் தெரிவித்தார். இதற்குப் பிறகு உ.வே.சா அவர்களுக்கு புதிய சிரமம் அல்லது புதிய தேடல் ஏற்பட்டது. அப்போது பௌத்த சமயம் சார்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார். சைவ மதத்தின் பின்னணியிலிருந்து வந்த உ.வே.சா மணிமேகலை பதிப்பு சிரமமானது என்று உணர்ந்தார். அவ்வாறு உணர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம் பௌத்தம் பற்றி விளக்க பௌத்தர்கள் இல்லாத சூழலை உணர்ந்திருந்தார். இதை பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்.
"நாம் சைவ மடத்தின் பயின்றமையால் சைவ சமய நூல்களைக் கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே வரும் வைஷ்ணவ வித்துவான்களின் பழக்கத்தால் வைணவ மதத்தை பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. சிந்தாமணியைப் பதிப்பிக்க முயன்ற காலத்தில் ஜைன மதத்தைப் பற்றிய செய்திகள் தெரியாமல் உழன்றோம். நல்லவேளையாக ஜைன நண்பர்கள் கிடைத்தார்கள். புதிதாக அச்சமயத்தைப் பற்றிய செய்திகளை அறிந்தோம். இப்போது புதிய சமய நூல் அல்லவா எடுத்துக்கொண்டோம். இதுவும் நமக்கு தெரியாத மதம் ஆயிற்று. ஜைன சமயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஜைன நண்பர்கள் இருந்தார்கள். புத்த மதமே இந்தியாவில் இல்லையே. பௌத்தர்களை நாம் எங்கே தேடுவோம்! பௌத்த மதத்தைப் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வோம் என்று என் சிந்தனை சுழன்றது". இக்கூற்றில் இருக்கும் ஆழத்தை உணர்ந்தால் அவர் எதிர்கொண்ட புதிய சவால் எவ்வளவு கடினமானது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல் என்கிற தரவை மட்டும் ரங்காசாரியர் தெரிந்து வைத்திருக்கவில்லை. பௌத்தம் தொடர்பாக ஆங்கிலத்தில் வெளிவந்த பல நூல்களை ஏற்கனவே கற்றவராக இருந்ததால் உ.வே.சா. அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையை உணர்ந்த ரங்காசாரியர் அவரை பயப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு பௌத்தம் தொடர்பான செய்திகளை அவருக்கு அவ்வப்போது கூறிவந்தார். "நான் ரங்காசசாரியாரை மணிமேகலை ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாக பற்றிக்கொண்டேன்" என்ற உ.வே.சா அவர்களின் கூற்று ரங்காசாரியர் அவருக்கு எவ்வளவு பெருந்துணையாக இருந்தார் என்பதைக் காட்டும்.
மணிமேகலையை ஆராய்வதற்கு உ.வே.சா தமிழ் நூல்களில் பௌத்தம் தொடர்பாக இருந்த செய்திகளைத் திரட்டினார். அவ்வாறு திரட்டிய போது அவருக்கு உதவிய நூல்கள்: நீலகேசி உரை, வீரசோழியம் இலக்கண உரை, சிவஞான சித்தியார் பரபக்கம், ஞானப்பிரகாசர் உரை ஆகியனவாகும். இவற்றுள் வீரசோழியம் நேரிடையாக பௌத்தமத நூலாகும். ஏனையவை பௌத்த மதத்தைக் கண்டனம் செய்யும் நூல்களாகும். இது உ.வே.சா பௌத்தத்தை எதிர்க்கும் நூல்களில் இருந்தும் பௌத்தம் பற்றி திரட்ட வேண்டிய சூழலில் இருந்தார் என்பதையே காட்டுகிறது. பௌத்த மதக் கருத்துக்களை முழுக்க முழுக்க பௌத்த சமயம் சார்ந்த தமிழ் நூல்களிலிருந்து திரட்டுவதற்குத் தமிழ்ப் பௌத்த நூல்கள் இல்லாமல் இருந்தது.
பௌத்தம் பற்றி மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன் பர்க், ரைஸ் டேவிஸ் முதலியோரின் பௌத்த நூல்களை ரங்காசாரியர் உ.வே.சா. அவர்களுக்குப் படித்துக் காட்டினார். இவர் ரங்காசாரியரிடமிருந்து கற்று அறிந்ததோடு மட்டுமில்லாமல் மணிமேகலையை இருவரும் சேர்ந்து வாசித்தனர். மணிமேகலையைப் பற்றி மதிப்பிடுகிறபோது "இனிய எளிய வார்த்தைகளில் பௌத்த சமயக் கருத்துக்கள் மணிமேகலையில் காணப்பட்டன" என்றே உ.வே.சா கூறுகிறார். உ.வே.சா வாசிக்க, அதைக் கேட்கும் ரங்காச்சாரியர் அவர்களின் உணர்வுனைப் பதிவு செய்யும் இவர் 'ரங்காச்சாரியர் கேட்டு கேட்டு பூரித்துப் போவார்" என்றார். "என்ன அழகாய் இருக்கிறது! மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அமைந்து இருக்கின்றன!" என்று ரங்காச்சாரியர் கூறும் பதில்கூட மணிமேகலையில் இடம்பெற்றுள்ள நேரடி மொழிபெயர்ப்பு பற்றியதாக இருக்க வேண்டும்.
"நான் இங்கிலீஷில் எவ்வளவோ வாசித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு எளிமையான பகுதிகளைக் கண்டதில்லை" என்று ரங்காசாரியர் மணிமேகலை பற்றி குறிப்பிடுவதன் மூலம் மணிமேகலையின் எளிமையையும் இனிமையையும் புரிந்துகொள்ளலாம்.
புத்தரைப் பற்றிய அடிகளை வாசிக்கும்போது "என் உடல் சிலிர்க்கும்" என்று உ.வே.சா கூறுகிறார். இது மணிமேகலையை எவ்வளவு ஆழ்ந்து நேசித்து வாசித்தார் என்பதையே காட்டுகிறது. புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபோது அருகில் இருந்தவர்கள் புலம்புவதாக வீரசோழிய உரையில் இடம்பெற்றுள்ள பாடலொன்றை 'வாசிக்கும்போது படிக்க முடியாமல் நா தழுதழுத்தது' என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறும் உ.வே.சா அவர்களின் நிலமையை, அப்பகுதியை வாசிக்கும்போது எப்படி இருந்திருக்கும் என்று அந்த சோகத்தில் தன்னை மறந்து உருகிப்போன மற்றொரு நபராகிய ரங்காச்சாரியர் அவர்களுக்குத்தான் நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கும். இவ்விடத்தில் ரங்காச்சாரியரும் தன்னை மறந்து போனார் என்பதை நேரில் பார்க்க உ.வே.சா அவர்களுக்குத்தான் வாய்ப்பு கிட்டியது.
உ.வே.சா தன் பௌத்தத் தேடலைத் தமிழக நிலப்பரப்போடு மட்டும் நிறுத்திவிடவில்லை. மணிமேகலையில் இலங்கையைப் பற்றிய குறிப்பு உள்ளதால், அவ்விடங்களைப் பற்றி அறியவும் ஆர்வத்தை மேற்கொண்டார். இதற்காக கொழும்பில் இருந்த குமாரசாமி அவர்களைக் கடிதத்தின் மூலம் தொடர்பு கொண்டார். குமாரசாமிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று மணிமேகலையில் குறிக்கப்பட்டுள்ள இலங்கைசார் இடங்களை தெரிந்து கொள்வது. இரண்டு பௌத்தம் பற்றி அறிந்துகொள்வது.
இலங்கையிலிருந்து உ.வே
சா அவர்களின் எதிர்பார்ப்புக்குக் கிட்டியவர் ஸுமங்களர் என்னும் பௌத்தப் பேராசிரியர் ஆவார். இவரிடமிருந்து பௌத்தம் பற்றி கேட்டறிந்து குமாரசாமி விடயங்களை கடிதத்தின் மூலம் தனக்கு எழுதினார் என்று உ.வே.சா குறிப்பிடுகிறார். ஸுமங்களர் அவருக்குப் பயனுள்ள வகையில் பயன்பட்டார் என்றுதான் கூறவேண்டும். இந்தியாவில் பௌத்தம் பற்றி பேசிய பெரியோர்கள் இலங்கையோடு தொடர்புகொள்ள எண்ணுவது சாதாரணமானதாகும். உ.வே.சா அவர்களுக்கும் இந்த வகையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது எனலாம். உ.வே.சா அவர்களும் ஸுமங்களர் அவர்களும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.
தொடர்ந்து ரங்காச்சாரியருக்கும் உ.வே.சா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவு மணிமேகலை காப்பியத்தைப் பொருத்தமட்டில் மிக முக்கியமானதாகும். உ.வே.சா அவர்களின் சந்தேகத்தைப் போக்குவது என்பது மட்டுமில்லாமல் மணிமேகலையை வெளியிட வேண்டும் என்று அவருக்கு ரங்காசாரியர் ஊக்கமூட்டி வந்தார். இதை இவர்களுக்கு இடையே ஏற்பட்ட உரையாடலைத் தெரிந்து கொண்டால் புரிந்து கொள்ளலாம்.
"இந்த புத்தகத்தை நீங்கள் விரைவில் பதிப்பித்து வெளியிடுங்கள். இது மாணிக்கத்தைப் போல அருமையானது" என்று ரங்காசாரியர் உ.வே.சா அவர்களிடம் கூறுகிறார். வேலை இடம் மாற்றம் ஏற்பட்டபோது கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பியபோது இவ்வாறு ரங்காசாரியர் உ.வே.சா அவர்களிடம் கூறினார்.
"தாங்கள் சென்னைக்குப் போவதனால் மணிமேகலை சம்பந்தம் உங்களை விடாது. அங்கேயும் வந்து தங்களுக்கு சிரமம் கொடுப்பதை விடப்போவதில்லை" என்று உ.வே.சா கூறுகிறார்.
ரங்காச்சாரியர் "அப்படியானால் நான் மிகவும் பாக்கியம் செய்தவன்" என்று கூறுகிறார்.
இத்தகைய உரையாடல்களை அறிகிற யாவரும், அவர்கள் இருவரும் மணிமேகலையின் மீது கொண்டிருந்த மதிப்பும் உ.வே.சா மணிமேகலை பதிப்பிக்க எடுத்த முயற்சியும் எத்தனையோ பாராட்டுக்குரியது என்பதை உணரலாம்.
மணிமேகலையை 5.6.1896 அன்று உ.வே.சா அச்சுக்கு கொடுத்தார். 1898 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்தது. இந்நூலை அச்சுக்குக் கொடுக்கப்பட்ட பிறகு கும்பகோணத்தில் பாண்டித்துரை தேவரை சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்பில் மணிமேகலை அச்சாகி வெளி வருவதை அறிந்த பாண்டித்துரைத்தேவர் இக்காப்பியத்திற்கு ஆகும் செலவை தாம் ஏற்றுக் கொள்வதாக உ.வே.சா அவர்ககளிடம் வாக்களித்தார். இவ்வாக்கினை அவர் நிறைவேற்றினார் என்பதை மணிமேகலை பதிப்பின் முகப்பில் இந்நூல் "பாலவனத்தம் ஜமீந்தாரவர்களாகிய இராமநாதபுரம் மா-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்கள் உதவியைக் கொண்டு" பதிப்பிக்கப் பட்டது என்று இடம் பெற்றதன் மூலம் அறியலாம்.
இந்நூலினைப் பதிப்பிக்க உ.வே.சா எடுத்த முயற்சியை கடலின் அக்கரையை அடைவதற்கு படகு இல்லாதபோது நீந்தியே செல்லும் திறன் கொண்டவரைப் போல செயல்பட்டார் என்று கூறினால் அது மிகையாகாது.
தொடரும்....
பிற்காலத்தில் சுயசரிதை எழுதிய உ.வே.சா அதில் மணிமேகலையைப் பதிப்பித்த அனுபவம் பற்றி எழுதினார். இந்த அனுபவத்தை வாசிக்கும்போது மணிமேகலைக் காப்பியத்தைப் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தை உணரலாம்.
உ.வே.சா பதிப்பித்த நூல்களில் அவருக்கு மணிமேகலை ஏற்படுத்திய சிரமத்தைப் போல வேறு எந்த நூலும் ஏற்படுத்திருக்காது என்றுதான் கூறவேண்டும். இதை "மணிமேகலைதான் பலவகையான சிக்கல்களை உண்டாக்கியது" என்று அவர் கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
தனக்கு ஒன்று தெரியும் என்றால் தெரியும் தெரியாது என்றால் தெரியாது என்று கூறும் மனம் படைத்த உ.வே.சா அவர்கள் மணிமேகலையின் சமயத்தைப் பற்றி கூறுகையில் "முதலில் அந்நூல் இன்ன சமயத்தைச் சார்ந்தது என்பது எனக்கு தெரியவில்லை" என்று வெளிப்படையாக கூறும் தன்மை கொண்டவராக இருந்தார். மணிமேகலை தொடர்பாக உ.வே.சா அவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்து வைத்த மிக முக்கியமான நபர்களில் ஒருவர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய மளூர் ரங்காசாரியர் அவர்களே ஆவார்.
இக்காப்பியம் பௌத்த சமயத்தைச் சார்ந்தது என்று உ.வே.சா அவர்களுக்கு அவர் தெரிவித்தார். இதற்குப் பிறகு உ.வே.சா அவர்களுக்கு புதிய சிரமம் அல்லது புதிய தேடல் ஏற்பட்டது. அப்போது பௌத்த சமயம் சார்ந்து தெரிந்துகொள்ள வேண்டிய நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார். சைவ மதத்தின் பின்னணியிலிருந்து வந்த உ.வே.சா மணிமேகலை பதிப்பு சிரமமானது என்று உணர்ந்தார். அவ்வாறு உணர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம் பௌத்தம் பற்றி விளக்க பௌத்தர்கள் இல்லாத சூழலை உணர்ந்திருந்தார். இதை பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்.
"நாம் சைவ மடத்தின் பயின்றமையால் சைவ சமய நூல்களைக் கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே வரும் வைஷ்ணவ வித்துவான்களின் பழக்கத்தால் வைணவ மதத்தை பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. சிந்தாமணியைப் பதிப்பிக்க முயன்ற காலத்தில் ஜைன மதத்தைப் பற்றிய செய்திகள் தெரியாமல் உழன்றோம். நல்லவேளையாக ஜைன நண்பர்கள் கிடைத்தார்கள். புதிதாக அச்சமயத்தைப் பற்றிய செய்திகளை அறிந்தோம். இப்போது புதிய சமய நூல் அல்லவா எடுத்துக்கொண்டோம். இதுவும் நமக்கு தெரியாத மதம் ஆயிற்று. ஜைன சமயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஜைன நண்பர்கள் இருந்தார்கள். புத்த மதமே இந்தியாவில் இல்லையே. பௌத்தர்களை நாம் எங்கே தேடுவோம்! பௌத்த மதத்தைப் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வோம் என்று என் சிந்தனை சுழன்றது". இக்கூற்றில் இருக்கும் ஆழத்தை உணர்ந்தால் அவர் எதிர்கொண்ட புதிய சவால் எவ்வளவு கடினமானது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல் என்கிற தரவை மட்டும் ரங்காசாரியர் தெரிந்து வைத்திருக்கவில்லை. பௌத்தம் தொடர்பாக ஆங்கிலத்தில் வெளிவந்த பல நூல்களை ஏற்கனவே கற்றவராக இருந்ததால் உ.வே.சா. அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையை உணர்ந்த ரங்காசாரியர் அவரை பயப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு பௌத்தம் தொடர்பான செய்திகளை அவருக்கு அவ்வப்போது கூறிவந்தார். "நான் ரங்காசசாரியாரை மணிமேகலை ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாக பற்றிக்கொண்டேன்" என்ற உ.வே.சா அவர்களின் கூற்று ரங்காசாரியர் அவருக்கு எவ்வளவு பெருந்துணையாக இருந்தார் என்பதைக் காட்டும்.
மணிமேகலையை ஆராய்வதற்கு உ.வே.சா தமிழ் நூல்களில் பௌத்தம் தொடர்பாக இருந்த செய்திகளைத் திரட்டினார். அவ்வாறு திரட்டிய போது அவருக்கு உதவிய நூல்கள்: நீலகேசி உரை, வீரசோழியம் இலக்கண உரை, சிவஞான சித்தியார் பரபக்கம், ஞானப்பிரகாசர் உரை ஆகியனவாகும். இவற்றுள் வீரசோழியம் நேரிடையாக பௌத்தமத நூலாகும். ஏனையவை பௌத்த மதத்தைக் கண்டனம் செய்யும் நூல்களாகும். இது உ.வே.சா பௌத்தத்தை எதிர்க்கும் நூல்களில் இருந்தும் பௌத்தம் பற்றி திரட்ட வேண்டிய சூழலில் இருந்தார் என்பதையே காட்டுகிறது. பௌத்த மதக் கருத்துக்களை முழுக்க முழுக்க பௌத்த சமயம் சார்ந்த தமிழ் நூல்களிலிருந்து திரட்டுவதற்குத் தமிழ்ப் பௌத்த நூல்கள் இல்லாமல் இருந்தது.
பௌத்தம் பற்றி மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன் பர்க், ரைஸ் டேவிஸ் முதலியோரின் பௌத்த நூல்களை ரங்காசாரியர் உ.வே.சா. அவர்களுக்குப் படித்துக் காட்டினார். இவர் ரங்காசாரியரிடமிருந்து கற்று அறிந்ததோடு மட்டுமில்லாமல் மணிமேகலையை இருவரும் சேர்ந்து வாசித்தனர். மணிமேகலையைப் பற்றி மதிப்பிடுகிறபோது "இனிய எளிய வார்த்தைகளில் பௌத்த சமயக் கருத்துக்கள் மணிமேகலையில் காணப்பட்டன" என்றே உ.வே.சா கூறுகிறார். உ.வே.சா வாசிக்க, அதைக் கேட்கும் ரங்காச்சாரியர் அவர்களின் உணர்வுனைப் பதிவு செய்யும் இவர் 'ரங்காச்சாரியர் கேட்டு கேட்டு பூரித்துப் போவார்" என்றார். "என்ன அழகாய் இருக்கிறது! மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அமைந்து இருக்கின்றன!" என்று ரங்காச்சாரியர் கூறும் பதில்கூட மணிமேகலையில் இடம்பெற்றுள்ள நேரடி மொழிபெயர்ப்பு பற்றியதாக இருக்க வேண்டும்.
"நான் இங்கிலீஷில் எவ்வளவோ வாசித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு எளிமையான பகுதிகளைக் கண்டதில்லை" என்று ரங்காசாரியர் மணிமேகலை பற்றி குறிப்பிடுவதன் மூலம் மணிமேகலையின் எளிமையையும் இனிமையையும் புரிந்துகொள்ளலாம்.
புத்தரைப் பற்றிய அடிகளை வாசிக்கும்போது "என் உடல் சிலிர்க்கும்" என்று உ.வே.சா கூறுகிறார். இது மணிமேகலையை எவ்வளவு ஆழ்ந்து நேசித்து வாசித்தார் என்பதையே காட்டுகிறது. புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபோது அருகில் இருந்தவர்கள் புலம்புவதாக வீரசோழிய உரையில் இடம்பெற்றுள்ள பாடலொன்றை 'வாசிக்கும்போது படிக்க முடியாமல் நா தழுதழுத்தது' என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறும் உ.வே.சா அவர்களின் நிலமையை, அப்பகுதியை வாசிக்கும்போது எப்படி இருந்திருக்கும் என்று அந்த சோகத்தில் தன்னை மறந்து உருகிப்போன மற்றொரு நபராகிய ரங்காச்சாரியர் அவர்களுக்குத்தான் நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கும். இவ்விடத்தில் ரங்காச்சாரியரும் தன்னை மறந்து போனார் என்பதை நேரில் பார்க்க உ.வே.சா அவர்களுக்குத்தான் வாய்ப்பு கிட்டியது.
உ.வே.சா தன் பௌத்தத் தேடலைத் தமிழக நிலப்பரப்போடு மட்டும் நிறுத்திவிடவில்லை. மணிமேகலையில் இலங்கையைப் பற்றிய குறிப்பு உள்ளதால், அவ்விடங்களைப் பற்றி அறியவும் ஆர்வத்தை மேற்கொண்டார். இதற்காக கொழும்பில் இருந்த குமாரசாமி அவர்களைக் கடிதத்தின் மூலம் தொடர்பு கொண்டார். குமாரசாமிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று மணிமேகலையில் குறிக்கப்பட்டுள்ள இலங்கைசார் இடங்களை தெரிந்து கொள்வது. இரண்டு பௌத்தம் பற்றி அறிந்துகொள்வது.
இலங்கையிலிருந்து உ.வே
சா அவர்களின் எதிர்பார்ப்புக்குக் கிட்டியவர் ஸுமங்களர் என்னும் பௌத்தப் பேராசிரியர் ஆவார். இவரிடமிருந்து பௌத்தம் பற்றி கேட்டறிந்து குமாரசாமி விடயங்களை கடிதத்தின் மூலம் தனக்கு எழுதினார் என்று உ.வே.சா குறிப்பிடுகிறார். ஸுமங்களர் அவருக்குப் பயனுள்ள வகையில் பயன்பட்டார் என்றுதான் கூறவேண்டும். இந்தியாவில் பௌத்தம் பற்றி பேசிய பெரியோர்கள் இலங்கையோடு தொடர்புகொள்ள எண்ணுவது சாதாரணமானதாகும். உ.வே.சா அவர்களுக்கும் இந்த வகையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது எனலாம். உ.வே.சா அவர்களும் ஸுமங்களர் அவர்களும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.
தொடர்ந்து ரங்காச்சாரியருக்கும் உ.வே.சா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவு மணிமேகலை காப்பியத்தைப் பொருத்தமட்டில் மிக முக்கியமானதாகும். உ.வே.சா அவர்களின் சந்தேகத்தைப் போக்குவது என்பது மட்டுமில்லாமல் மணிமேகலையை வெளியிட வேண்டும் என்று அவருக்கு ரங்காசாரியர் ஊக்கமூட்டி வந்தார். இதை இவர்களுக்கு இடையே ஏற்பட்ட உரையாடலைத் தெரிந்து கொண்டால் புரிந்து கொள்ளலாம்.
"இந்த புத்தகத்தை நீங்கள் விரைவில் பதிப்பித்து வெளியிடுங்கள். இது மாணிக்கத்தைப் போல அருமையானது" என்று ரங்காசாரியர் உ.வே.சா அவர்களிடம் கூறுகிறார். வேலை இடம் மாற்றம் ஏற்பட்டபோது கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பியபோது இவ்வாறு ரங்காசாரியர் உ.வே.சா அவர்களிடம் கூறினார்.
"தாங்கள் சென்னைக்குப் போவதனால் மணிமேகலை சம்பந்தம் உங்களை விடாது. அங்கேயும் வந்து தங்களுக்கு சிரமம் கொடுப்பதை விடப்போவதில்லை" என்று உ.வே.சா கூறுகிறார்.
ரங்காச்சாரியர் "அப்படியானால் நான் மிகவும் பாக்கியம் செய்தவன்" என்று கூறுகிறார்.
இத்தகைய உரையாடல்களை அறிகிற யாவரும், அவர்கள் இருவரும் மணிமேகலையின் மீது கொண்டிருந்த மதிப்பும் உ.வே.சா மணிமேகலை பதிப்பிக்க எடுத்த முயற்சியும் எத்தனையோ பாராட்டுக்குரியது என்பதை உணரலாம்.
மணிமேகலையை 5.6.1896 அன்று உ.வே.சா அச்சுக்கு கொடுத்தார். 1898 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்தது. இந்நூலை அச்சுக்குக் கொடுக்கப்பட்ட பிறகு கும்பகோணத்தில் பாண்டித்துரை தேவரை சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்பில் மணிமேகலை அச்சாகி வெளி வருவதை அறிந்த பாண்டித்துரைத்தேவர் இக்காப்பியத்திற்கு ஆகும் செலவை தாம் ஏற்றுக் கொள்வதாக உ.வே.சா அவர்ககளிடம் வாக்களித்தார். இவ்வாக்கினை அவர் நிறைவேற்றினார் என்பதை மணிமேகலை பதிப்பின் முகப்பில் இந்நூல் "பாலவனத்தம் ஜமீந்தாரவர்களாகிய இராமநாதபுரம் மா-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்கள் உதவியைக் கொண்டு" பதிப்பிக்கப் பட்டது என்று இடம் பெற்றதன் மூலம் அறியலாம்.
இந்நூலினைப் பதிப்பிக்க உ.வே.சா எடுத்த முயற்சியை கடலின் அக்கரையை அடைவதற்கு படகு இல்லாதபோது நீந்தியே செல்லும் திறன் கொண்டவரைப் போல செயல்பட்டார் என்று கூறினால் அது மிகையாகாது.
தொடரும்....
No comments:
Post a Comment