இத்தனை நூற்றாண்டு காலம் வள்ளுவர் தன்னை இச்சமூகத்தில் நிலைநிறுத்திக்கொண்டது தன்னுடைய இலக்கியப் படைப்பாற்றலினாலும் தனது கருத்துக்களினாலும் ஆகும்.
சங்க இலக்கியம், காப்பியம் போன்ற பேரிலக்கியங்களின் வரிசையில் தன் ஆளுமையினால் நீங்காத இடம்பிடித்திருந்த வள்ளுவரைப் பற்றி வேஷ சாதியினர் மிக தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அற்பத்தனமான சில கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் வள்ளுவர் போன்ற யதார்த்த பிராமணர்களின் இயல்பான பெருமையை நிலைகுலைப்பது கடினமானது அல்லது முடியாத ஒன்றாகும்.
வள்ளுவரை விளக்குவதில் பண்டிதர் அயோத்திதாசர் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தார். பண்டிதருக்கு முன்பாக வள்ளுவரை தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டவிதம் பற்றி ஒரு பரிசோதனை முறைக்காக நிகழ்த்தப்படும் இவ்வாய்வு வள்ளுவர் யதார்த்த பிராமணர் என்பதை வெளிப்படுத்தும்.
No comments:
Post a Comment